Lake Lucerne கப்பல் புகையின் காரணமாக Brunnen SZ இல் நிறுத்தப்பட்டது
சனிக்கிழமை நண்பகலில் லேக் லூசர்ன் பயணக் கப்பலில் புகை உருவானதால் அதன் பயணம் இடைநிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக, 385 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பலை, கன்டோன் சுவைசின் Brunnen க்கு அழைத்துச் சென்று, தற்காலிகமாக அங்கே நிறுத்துவதற்கு பொறுப்பானவர்கள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து ஸ்விஸ் கன்டோனல் போலீசார் கூறுகையில், சரக்கு லிப்ட் பகுதியில் புகை மூண்டதாக தெரிவித்தனர். நிறுத்தத்தின் போது தீயணைப்புத் துறை லிப்டை சரிபார்த்து கப்பலை காற்றோட்டம் அடையச்செய்தனர்.

கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு ஊழியர்களை மீட்புப் படையினர் ஆய்வு செய்தனர். மதியம் 1.45 மணியளவில் “Stadt Luzern” என்ற நீராவி கப்பல் தனது பயணத்தை தொடர முடிந்தது. மதியம் 1 மணியளவில் கப்பலில் புகை மூண்டதாக ஸ்விஸ் மாகாண காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
குறித்த “Stadt Luzern” எனும் கப்பல், சுவைசின் Gersau இலிருந்து கன்டோன் ஊரியிலுள்ள Treib நகரின் திசைநோக்கி பயணித்துக் தமை குறிப்பிடத்தக்கது.
©கீஸ்டோன்/எஸ்டிஏ