லுகானோவில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் 40 வயது நபர் கைது
சுவிட்சர்லாந்தின் டிசினோ கன்டோனில் உள்ள Lugano பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய சுவிஸ் நபர் ஒருவர், பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொக்கைன் மற்றும் ஹெரோயின் போன்ற கடுமையான போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தில் தொடர்புடையவர் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரை கைது செய்ததுடன், அவரது உடல் மற்றும் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 200 கிராம் கொக்கைன், 60 கிராம் ஹெரோயின், மேலும் சில கிராம் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடன், போதைப்பொருட்களைப் பொதியிட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பல நூறு சுவிஸ் ஃப்ராங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் Lugano City Police-இன் போதைப்பொருள் விசாரணைப் பிரிவும் இணைந்து செயல்பட்டது. குற்றச்சாட்டுகளில் கடுமையான சட்ட மீறல்கள், போதைப்பொருள் தொடர்பான கூட்டாட்சி சட்டங்களை மீறுதல் மற்றும் பணம் சுத்திகரிப்பு உள்ளிட்டவை அடங்குகின்றன.
சம்பந்தப்பட்ட நீதிபதி, இந்த நபருக்கு விதிக்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை அரசு வழக்கறிஞர் Simone Barca தலைமையில் முன்னெடுத்து வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிசினோ கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.