சுவிஸ் Aargau மாநில விபத்தில் இலங்கை தமிழர்கள் மரணம்! வெளியான புகைப்படம் சுவிற்சர்லாந்தில் கடந்தவாரம் ஏற்பட்ட ஒரு கோர விபத்தில் இலங்கையைச்சேர்ந்தவர்கள் காயமுற்று, வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட செய்தியும் அதனை தொடர்ந்து அதில் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பாகவும் எமது SwissTamil24.Com இணையத்தளத்தில் வெளியான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்.
தற்போது விபத்தில் சிக்கி சிகிச்சை பலன் இன்றி குறித்த நபர்கள் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக இலங்கை தமிழர்களான அவர்களது பெயர் விபரங்கள் உட்பட புகைப்படங்கள் முதல் முதலாக வெளியாகி உள்ளது. அது பற்றிய மேலதிக தகவல்கள் கீழே தரப்படுகிறது.
சுவிஸ் Aargau மாநிலத்தில் A1 நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து
இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் Thanapalasingham Kannan (69) மற்றும் Kannan Suresh (34). இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள். Thanapalasinghamமும், Kannan-ம் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே Kannan உயிரிழந்த நிலையில், Thanapalasingham மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் பலத்த சேதமடைந்து நொறுங்கியது தொடர்பாக புகைப்படங்கள் செய்திகள் நாம் முன்னரே பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.