லூசர்ன் மாகாணத்தில் பல போக்குவரத்து விபத்துக்கள் பதிவு செவ்வாய்க்கிழமை, நவம்பர் 12, 2024 அன்று, லூசர்ன் மாகாணத்தில் பல கடுமையான போக்குவரத்து விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக லுசேர்ன் கன்டோன் போலீசார் அறிவித்துள்ளனர்.
உள்வில் பகுதியில் மாலை சுமார் 6:30 மணியளவில், 12 வயது சிறுமி ஒரு லாரியின் பின்னால் தெருவில் ஓடும்போது பிரதான தெருவில் கார் மோதியது. சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்தின் காரணமாக சொத்து சேதம் தோராயமாக 5,000 பிராங்குகள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் Hochdorf குதியில் மாலை சுமார் 5:30 மணியளவில் Baldeggstrasse இல் ஒரு வளைவில் நேருக்கு நேர் ஏற்பட்ட விபத்தில் ஒரு கார் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு இருந்தது. இருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், விபத்தை ஏற்படுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. பொருள் சேதம் சுமார் 25,000 பிராங்குகள். தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
இதே வேளையில் மற்றுமொரு விபத்து Buchrain (புக்ரைன்)பகுதியில் பிற்பகல் 4:00 மணியளவில் A14 நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. ஒன்று மத்திய தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. பின்னர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்விபத்தின் காரணமாக சொத்து சேதம் சுமார் 30,000 பிராங்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.