சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அந்த பகுதியில் அமைந்துள்ள தளபாட உற்பத்தி நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 250 தீயணைப்பு படை வீரர்கள் கடமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ வித்து காரணமாக உற்பத்திச் சாலையின் கூரை எரிந்து விழுந்து விட்டதாகவும் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து காரணமாக பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தினால் பாரியளவு சொத்து சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் இது தொடர்பில் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புகைப்பட உதவி :- Luzern Police