சந்தேகத்திற்குரிய கார் திருடன் டெசினோவில் கைது கார்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 21 வயதான மொராக்கோ நாட்டவர் வியாழன் இரவு டெசினோவின் பயாஸ்கா நகரத்தில்கைது செய்யப்பட்டார்.
சுவிட்சர்லாந்தில் நிரந்தர குடியிருப்பு இல்லாத அந்த நபர், கைது செய்யப்படுவதை எதிர்த்தார், மேலும் ஒரு அதிகாரியை அடிக்க முயன்றார் என்று டிசினோ கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

வயா லுகானோவில் கார்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து பொலிசார் புகாரைப் பெற்றதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் பல கார் திருட்டுகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விசாரணை நடந்து வருகிறது.
©கீஸ்டோன்/எஸ்டிஏ