சுவிட்சர்லாந்தில் தேசிய மண் பரிசோதனை திட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. ‘மண் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
அவை உணவு உற்பத்தியை உறுதி செய்கின்றன, தண்ணீரை வடிகட்டுகின்றன, மேலும் பெரிய உயிரியல் பன்முகத்தன்மைக்கு தங்குமிடம் அளிக்கின்றன’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இலக்கு முறையில் மண்ணைப் பாதுகாக்க, அவற்றின் தரம் மற்றும் அவை வழங்கும் சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டும்’ என்று குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மண் பரிசோதனை திட்டம் பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இருப்பினும்இ இந்த தேசிய திட்டத்தில் பங்கேற்க, ஒரு சிறிய நிலப்பரப்பை தவிர, உங்களுக்கு தேவையானது ஒரு மொபைல்அப்ளிகேசன், முற்றிலும் பருத்தியால் செய்யப்பட்ட ஒரு ஜோடி உள்ளாடை மற்றும் அதை புதைக்க ஒரு மண்வெட்டி.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் புதைத்த உள்ளாடைகளை தோண்டி எடுத்த பிறகு, சிதைவின் நிலை மண்ணில் நடைபெறும் உயிரியல் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்கும் என சொல்லப்படுகிறது.
‘உள்ளாடைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சிதைந்திருந்தால்இ இது மண்ணின் ஆரோக்கியத்திற்கும் உயிர்ச்சக்திக்கும் ஒரு சான்றாகும்.’ என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.