2025ஆம் ஆண்டுக்கான உலகிலேயே பணக்கார நாடாக சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!!
2025ஆம் ஆண்டுக்கான உலக செல்வ அறிக்கை (Global Wealth Report) வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற நிதி நிறுவனமான UBS வெளியிட்ட இந்த அறிக்கையில் சுவிட்சர்லாந்து உலகில் உள்ள மிகப்பெரிய செல்வம் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, சுவிட்சர்லாந்து குடிமக்களின் ஒருவருக்கு இருப்புச் சொத்து மற்றும் பணச் செல்வம் சேர்த்து சராசரியாக 561,000 சுவிஸ் ஃப்ராங்க் இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 சதவிகிதம் அதிகம் ஆகும்.
சொத்து மதிப்பின் உயர்வே முக்கிய காரணம்
இந்த வருமான உயர்வுக்குப் முக்கிய காரணம், சுவிட்சர்லாந்தில் நிலவும் நிலங்கள், வீடுகள், முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் பங்குகளின் மதிப்பு வளர்ச்சி என UBS குறிப்பிட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் வைத்திருக்கும் சொத்துகள் மற்றும் முதலீடுகள் அதிக மதிப்புக்கு விற்பனை செய்யக்கூடிய அளவில் உள்ளன.
அமெரிக்கா, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கும் சொத்துக்களின் மதிப்பு 11 சதவிகிதம் உயர்ந்துள்ளன. ஆனாலும், சராசரி அளவில் ஒரு நபருக்கான செல்வத்தில் சுவிட்சர்லாந்தை விட குறைவாகவே உள்ளது.

மொத்த சொத்துக்களின் மதிப்பில் மிக வேகமான வளர்ச்சி கிழக்கு ஐரோப்பா நாடுகளில் பதிவாகியுள்ளது. அங்கு சொத்துக்களின் மதிப்பு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதற்கேற்ப, சில கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ASIA நாடுகளில் 1.5 சதவிகிதம் வரை சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையும் UBS அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்த UBS அறிக்கையால், சுவிட்சர்லாந்து உலகளாவிய செல்வ அடிப்படையில் முன்னணி இடத்தை வகிக்கிறது என்பதோடு, அந்த நாட்டின் பொருளாதார நிலை, முதலீட்டு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தரம் மிகுந்தது என்பதை உறுதி செய்கிறது. இத்தகவல், வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலகளாவிய நிதி நிலையை புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான அடையாளமாகவும் அமைகிறது.