சுவிட்சர்லாந்தின் மீண்டும் குளிரான காலநிலை நிலவ ஆரம்பித்துள்ளது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் பனிச்சரிவு பதிவாகியுள்ளதோடு பல்வேறு வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லுசேர்ன், ஒப்வால்டன், சென்ட்காலன் மற்றும் துர்காவ் கன்டோன்களில் பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக துர்காவ் கன்டோனில் ஆசிபன் நெடுஞ்சாலையில் குறித்த நேரத்துக்குள் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். மழைத்தூறலுடன் பனிபடர்த சாலை போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
இதில் பெரும்பாலான விபத்துக்கள் பிராவ்வன்பேல்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.