சுவிட்சர்லாந்தில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விலை கண்காணிப்பு அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ற வகையில் வாகன தரிப்பு கட்டணம் அளவீடு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகன தரிப்பு கட்டணங்களின் ஊடாக நகராட்சிகள் லாபம் ஈட்டுவதனை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர நிர்வாகத்தினர் தங்களுக்கு விரும்பிய தொகைகளை வாகன தரிப்பு கட்டணமாக தற்பொழுது அறவீடு செய்து வருகின்றனர்.
குறிப்பாக லூசானில் 500 பிராங்குகளும், பேர்னில் 492 பிராங்குகளும் வின்டதோரில் 710 பிராங்குகளும் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீதிகள் அனைவருக்கும் சொந்தம் எனவும் இதனால் வாகன தரிப்பு கட்டணமானது 300 பிராங்குகளுக்கு மேற்படக்கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source:- Tamil-info