சிறுத்தை குட்டி இறந்ததற்கு பாஸல் உயிரியல் பூங்கா இரங்கல் ஜூன் மாதம், பாஸல் உயிரியல் பூங்கா மூன்று பனிச்சிறுத்தை குட்டிகள் பிறந்ததை வரவேற்றது. துரதிர்ஷ்டவசமாக, குட்டிகளில் ஒன்றான வாயா என்ற பெண் தனது இரண்டாவது மாதத்தில் எதிர்பாராத விதமாக இறந்தது.
புதனன்று மிருகக்காட்சிசாலையின் அறிவிப்பின்படி, இறப்புக்கான காரணம் இடுப்பு சாக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுதான் என்று தெரியவந்தது.

குறித்த சிறுத்தைக்குட்டி நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக, வாயா என்றழைக்கப்படும் குறித்த சிறுத்தைக்குட்டி ஆகஸ்ட் 23 அன்று காலமானதாக உயிரியல் பூங்க அறிவித்துள்ளது.
உயிரியல் பூங்கா மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த இறுதி நோயியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கிறது.
உயிர் பிழைத்த மேலும் இரண்டு குட்டிகள் நலமாக உள்ளதாக பாஸல் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.