பாசறைப்பாணருக்கு வணக்க நிகழ்வு பெர்னில் நடைபெறுகிறது
சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர் சமூகத்தின் சார்பில், மறைந்த தமிழ்த்தேசிய உணர்வாளரும் சமூகப் பணியாளருமான மாமனிதர் தேனிசை செல்லப்பாவை நினைவுகூரும் வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:30 மணிக்கு பெர்ன் நகரில் உள்ள Europaplatz 1B, 3008 Bern என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அவரது வாழ்நாள் பணிகள், தமிழ்த்தேசியத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கு செய்த சேவைகள் நினைவுகூரப்பட உள்ளன.

தமிழ் சமூகத்தில் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய தேனிசை செல்லப்பா, பலருக்கும் வழிகாட்டியாகவும் ஊக்கமாகவும் திகழ்ந்தவர் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவரின் நினைவுகளை கௌரவிக்கும் இந்த நிகழ்வில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
சுவிட்சர்லாந்து தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.