சூரிச் நகரில் வீட்டு வசதி பிரச்சினையை குறைக்கும் நோக்கில், நகராட்சி புதிய முயற்சி
சூரிச் நகரில் வீட்டு வசதி பிரச்சினையை குறைக்கும் நோக்கில், நகராட்சி புதிய முயற்சியை அறிவித்துள்ளது. அதிக வாடகைச் சுமையால் மக்கள் சிரமப்படும் சூழ்நிலையில், நகரம் மொத்தம் 122 குறைந்த விலையில் கிடைக்கும் குடியிருப்புகளை (affordable apartments) கட்டி வருகிறது. இவை சூரிசின் Kreis 4 பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் வரும் கோடைக்காலத்துக்குள் (2026) குடியிருப்பதற்கு தயாராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய குடியிருப்பு திட்டம் சுமார் 360 பேருக்கு வீட்டு வசதி வழங்கும். சூரிச் போன்ற உலகின் அதிக வாடகை வசூலிக்கப்படும் நகரத்தில் இது மிகுந்த நிவாரணமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, நான்கு அறை கொண்ட ஒரு வீட்டின் மாத வாடகை 1,850 ஃபிராங்க் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மூன்று அறை கொண்ட வீட்டின் மாத வாடகை 1,590 ஃபிராங்க் ஆகும். இவை சூரிசின் சாதாரண சந்தை வாடகை விலையில் ஒப்பிடும்போது மிகவும் குறைந்ததாக கருதப்படுகின்றன.

வீட்டு வாடகை உயர்வால் திணறும் பல குடும்பங்களுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூகத்தில் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கும், நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கும் இந்த வீடுகள் பெரிய வாய்ப்பாக அமையும்.
இந்த வீடுகளில் குடியேற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான விண்ணப்பங்கள் வரும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு நகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சூரிச் நகரத்தில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வரும் “affordable housing” குறைபாடு இத்திட்டத்தின் மூலம் ஓரளவிற்கு சரியாகும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
© KeystoneSDA