சுவிட்சர்லாந்தில் இரண்டாம் உலகப் போர் பதுங்கு குழிகளுக்கு புதிய பயன்பாடு
சுவிட்சர்லாந்து முழுவதும், இரண்டாம் உலகப் போர் காலத்தில் கட்டப்பட்ட இராணுவ பதுங்கு குழிகள் இன்னும் பல இடங்களில் காணப்படுகின்றன. 1990களில் இருந்து இவை பயன்பாட்டில் இல்லாத நிலையில், உக்ரைனில் நடைபெறும் போர் இந்த பதுங்கு குழிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சுவிஸ் இராணுவம், குறிப்பாக குளிர்ப் போர் காலத்தில் மோர்ட்டார் ஆயுதங்களுடன் பயன்படுத்தப்பட்ட சில பயன்பாட்டில் இல்லாத பதுங்கு குழிகளை மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பழைய கட்டமைப்புகளை மீண்டும் பயனுள்ளதாக மாற்றுவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய, இராணுவம் ஒரு டெண்டர் அழைப்பை வெளியிட்டுள்ளது.

இந்த இராணுவ கட்டமைப்புகள், நவீன தொழில்நுட்பங்களால் பொருத்தப்பட்ட, வலுவான பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட உள்ளன. சுவிஸ் இராணுவத்தின் கூற்றுப்படி, இவை ‘தாக்குதல்களுக்கு எளிதில் உட்படாத பாதுகாப்பு முனைகளாக’ (defence nodes) செயல்படும். இந்த முயற்சி, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.