சுவிஸ் உணவு மற்றும் பான உற்பத்தியாளர்கள் சர்க்கரை பயன்பாட்டை குறைக்க உறுதி
சுவிஸ் உணவு மற்றும் பான உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை சர்க்கரை குறைப்பதற்கான வாக்குறுதியை புதன்கிழமை (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. மொத்தம் 21 உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளில் சர்க்கரை அளவை மேலும் குறைக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்கனவே நேர்மறையான பலன்களை உருவாக்கியுள்ளது என சுவிஸ் கூட்டாட்சி அரசு வெளியிட்ட அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த சக்கரைக்குறைப்பின் விளைவாக
-
காலையுணவு தானிய உணவுகளில் (Breakfast cereals) சர்க்கரை அளவு ஏறக்குறைய 40% வரை குறைக்கப்பட்டுள்ளது.
-
பால் சார்ந்த தயாரிப்புகளில், தயிரில் 13% குறைப்பு, மற்றும் பால் அடிப்படையிலான பானங்களில் 14% குறைப்பு நிகழ்ந்துள்ளது.
-
அதேபோல், குளிர்பானங்கள் மற்றும் இனிப்பான பானங்களும் இன்று பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.
அரசின் பாராட்டு
சுகாதாரத்துறையின் நோக்கத்துடன் இணைந்த இந்த முயற்சி, மக்களின் உணவுப் பழக்கங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இந்த சர்க்கரை குறைப்பு நீண்டகால முதலீடாக பார்க்கப்படுகிறது.
“சுவிஸ் நிறுவனங்களின் இந்த முன்முயற்சி, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கும் வகையில் மிக முக்கியமானது.” என அரசு வலியுறுத்தியுள்ளது.
@Keystone