ஜெர்மனியில் சுவிஸ் குடும்பம் விபத்தில் சிக்கியது – 14 வயது சிறுவன் காயம்
ஜெர்மனியின் தெற்கு ஹெஸ்சனில் அமைந்துள்ள A5 நெடுஞ்சாலையில், ஜெனீவா எண் பதிவுடைய ஒரு காரில் பயணித்த சுவிட்சர்லாந்து குடும்பம் ஒரு மோசமான விபத்தில் சிக்கியது.
வாகனத்தில் இருந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் – இருவர் பெரியவர்கள் மற்றும் நால்வர் குழந்தைகள் – அனைவரும் காயமடைந்தனர். 7, 12, 14 மற்றும் 18 வயதுடைய குழந்தைகளில், 14 வயது சிறுவன் மிகவும் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து, (சுவிங்கென் பெர்க்) Zwingenberg மற்றும் Bensheim (பென்ஸ் ஹேய்ம் ) இடையே, மழையால் வழுக்கிய சாலை மீது ஓட்டிய போது ஏற்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். 41 வயதுடைய டிரைவர், வண்டியின் கட்டுப்பாட்டை இழந்ததால், அது நடுப்பக கம்பியைத் தொட்டுவிட்டு புரண்டது.
தீவிரமாக காயமடைந்த சிறுவன், மருத்துவ ஹெலிகாப்டரின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்பட்ட சாலைப் பகுதி சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.
இவ்விபத்து வாகன ஓட்டிகள் மழைக்காலத்தில் கூடுதல் கவனத்துடன் ஓட்ட வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.