சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்கள் குறித்து வெளியான புதிய தகவல்.!!
சுவிட்சர்லாந்தின் லௌசானில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (EPFL) மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு விரிவான ஆய்வு, குடியுரிமை பெற்றவர்களின் தற்போதைய வித்தியாசமான சூழ்நிலையை வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த ஆய்வில் சனத்தொகை கணக்கெடுப்புகள், குடியுரிமை பதிவுகள் மற்றும் மைய இடமாற்றத் தகவல் முறைமைகளிலிருந்து கிடைத்த பல்லாயிரக்கணக்கான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம், கடந்த சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்துக்கு வருவோரின் நோக்கங்களும் வாழ்க்கைமுறைகளும் முற்றிலும் மாறிவிட்டன என்பது தெரியவந்தது.
1990களில் பெரும்பாலும் பால்கன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம் அகதிகள் பெரும்பாலும் நிரந்தரமாக தங்கவேண்டி சுவிட்சர்லாந்துக்கு வந்தனர். இதேபோன்ற பழைய படக்காட்சி தான் இன்றும் பொதுமக்களில் நிலவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் இந்த ஆய்வின் தலைமையாசிரியர் மதியாஸ் லெர்ச் (Mathias Lerch) தெரிவித்தார். “இன்றைய குடியுரிமை பெறுவோர் பெரும்பாலும் கல்வி அல்லது தொழில்முனைவு காரணமாக சுவிட்சர்லாந்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் பாதி பேர் ஐந்து முதல் பத்து வருடங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்” என அவர் கூறினார்.
இது பொதுவாக மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலைத்தன்மை கொண்ட குடியுரிமை பெறுவோர் பற்றிய பார்வையை மாற்றுகிறது. இப்போது வருபவர்கள் தற்காலிக நோக்கங்களுடன் வருவோர், நிலைத்த இருப்புக்கு முனையவில்லை என்பது இத்தகவலால் உறுதி செய்யப்படுகிறது.
இது போன்ற ஆய்வுகள், குடியுரிமை மற்றும் அகதி விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் சட்டமுறைகள் எவ்வாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
@KeystoneSDA