பல்கலைக்கழகக் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி அரசு 2027 நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொது பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, சுவிஸ் மாணவர்களின் கல்விக் கட்டணம் இரட்டிப்பாகவும், வெளிநாட்டு மாணவர்களின் கட்டணம் நான்கு மடங்காகவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்தக் கொள்கைக்கு எதிராக புதன்கிழமை நூற்றுக்கணக்கான மாணவர்கள் சுவிட்சர்லாந்தின் பல நகரங்களில் தெருக்களில் போராட்டம் நடத்தினர். குறிப்பாக சூரிக் நகரின் ஹெல்வெட்டியாப்ளாட்ஸ் பகுதியில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அதே சமயம், பெர்ன் கூட்டாட்சி சதுக்கத்தில் கூடுகையிட்ட மாணவர்கள் 34,538 கையெழுத்துகளைப் பெற்ற மனுவை கூட்டாட்சி தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்தனர்.

சுவிஸ் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கிய இந்த மனுவில், “இன்று கல்விக்கான நிதியை குறைப்பது நாளைய திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையையும், சமூக முன்னேற்றத் தடைையும், புதுமையில் முன்னிலை வகிக்கும் சுவிட்சர்லாந்தின் நிலையை பலவீனப்படுத்துவதாகவும் இருக்கும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உயர் கல்வி உலகளவில் தரமிக்கதாகக் கருதப்படுவதால், இந்தக் கட்டண உயர்வு உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என கல்வி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
© KeystoneSDA