சுவிஸில் தாய், தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் தாக்கிய நபர்
செயின்ட்.காலன் மாநிலத்தில் கொடூர தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 23 வயதான நபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக சென்ட்கேலன் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வன்முறை சம்பவம் வெள்ளிக்கிழமை (15.08.2025) அதிகாலை 2:20 மணிக்கு முன், உன்டெர்டார்ஃப்ஷ்டிராஸ்ஸே (Unterdorfstrasse) பகுதியில் இடம்பெற்றுள்ளது. 23 வயதான ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு நபர், தனது பெற்றோரும் சகோதரியையும் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெற்றோரும் சகோதரியும் கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போதைய தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் வீட்டினுள் கத்தியுடன் தாக்கி தனது குடும்பத்தினரை கடுமையாக காயப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு முதலில் வந்த செயின்ட்.காலன் மாநில காவல்துறை ரோந்துப் பிரிவு, குற்றம்சாட்டப்பட்ட நபரை அவரது குடும்பம் வசிக்கும் வீட்டின் முன்பாகவே கைது செய்தது. வீட்டின் வெளிப்புறத்திலும் உள்ளேயும் மூன்று காயமடைந்தவர்கள் காவல்துறை மற்றும் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் முதலில் சம்பவ இடத்திலேயே அவசர சிகிச்சை பெற்று, பின்னர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் செயின்ட்.காலன் மாநில காவல்துறை ரோந்துப் பிரிவுகள், சிறப்பு விசாரணை அதிகாரிகள், ரெகா (Rega) ஹெலிகாப்டர், மூன்று ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவர்கள் மருத்துவ குழுவுடன் இணைந்து செயல்பட்டனர். செயின்ட்.காலன் மாநில வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைமையில், இந்த தாக்குதலின் பின்னணி தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.