நியுசாட்டல் – அடிமை வியாபாரி டேவிட் டி பூரி சிலை திருட்டு, தொடர் சேதப்படுத்தலால் நகரம் அதிர்ச்சி
நியுசாட்டல் நகரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மர்மமான சேதப்படுத்தல் சம்பவங்களின் நடுவில், சர்ச்சைக்குரிய டேவிட் டி பூரியை (David de Pury) பிரதிபலிக்கும் வெண்கலச் சிலை காணாமல் போயுள்ளது. இந்தச் சிலை, நகர மையத்தில் உள்ள அவரது பெயரிடப்பட்ட சதுக்கத்தில் இருந்து, சிமெண்ட் அடித்தளத்துடன் ஒரு வாரத்திற்கு முன் உடைக்கப்பட்டுள்ளது.. நகராட்சி இதுகுறித்து குற்றவியல் புகார் அளித்துள்ளது.
சிலையின் சேதத்தின் மதிப்பு வெளியிடப்படவில்லை. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சிலைக்கு காப்பீடு இல்லை; “பொது இடங்களில் வைக்கப்படும் கலைப்பணிகளை காப்பீடு செய்ய காப்பீட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை, ஏனெனில் சேதம், திருட்டு அல்லது காலநிலை பாதிப்பு அபாயங்கள் அதிகம்” என நகராட்சி தகவல் பொறுப்பாளர் சோபி ஷ்னைடர் (Sophie Schneider) தெரிவித்தார்.
2022ல் நிறுவப்பட்ட இந்தச் சிலை, ஜெனீவா கலைஞர் மாத்தியாஸ் ப்ஃபூண்ட் (Mathias Pfund) உருவாக்கியதாகும். இது, டேவிட் டி பூரி தலைகீழாக சிமெண்ட் அடித்தளத்தில் தலை புதைந்திருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த வடிவமைப்பு, 1906ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நிலநடுக்கத்தின் போது தவறுதலாக கவிழ்ந்த லூயிஸ் ஆகாசிஸ் (Louis Agassiz) சிலையை குறிக்கும் வகையிலும், நியுசாட்டலுடன் தொடர்புடைய இரண்டு சர்ச்சைக்குரிய வரலாற்று முகங்களை நினைவுகூரும் வகையிலும் அமைந்தது.

டேவிட் டி பூரி, 18ஆம் நூற்றாண்டில் அடிமை வியாபாரத்தின் மூலம் செல்வந்தரான வரலாறு கொண்டவர். இதற்கு முன்பும் இந்தச் சிலை சிவப்பு Paint கொண்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த சில வாரங்களில், நியுசாட்டல் நகரம் பல்வேறு சேதப்படுத்தல் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பத்து கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலேஜியட் தேவாலயம், லத்தீன் கல்லூரி மற்றும் இனவியல் அருங்காட்சியகம் அடங்கும். இதுகுறித்தும், தனியார் சொத்து உரிமையாளர்களுடன் இணைந்து, நகராட்சி மேலும் குற்றவியல் புகார் அளித்துள்ளது.
@city of Neuchâtel