சுவிட்சர்லாந்தில் இனவெறி சம்பவங்கள் உயர்வு
சுவிட்சர்லாந்தில் 2025ஆம் ஆண்டில் இனவெறி சம்பவங்கள் சிறிய அளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இனவெறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் ஆலோசனை வலையமைப்பு கடந்த ஆண்டு மொத்தம் 1,245 இனவெறி சம்பவங்களை பதிவு செய்து ஆய்வு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34 சம்பவங்கள் அதிகமாகும், அதாவது சுமார் 3 சதவீத உயர்வாகும்.
இந்த தரவுகள் சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) உள்ளிட்ட அரசு அமைப்புகளின் கண்காணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி மற்றும் பயிற்சி துறை, வேலைத்தளங்கள், பொதுஇடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில்தான் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பதிவான சம்பவங்களில் பெரும்பாலும் கருப்பின மக்களை குறிவைத்த இனவெறி சம்பவங்களே அதிகமாக உள்ளன. இதனுடன், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, யூதர்களுக்கு எதிரான இனவெறி சம்பவங்களும் உயர்ந்த மட்டத்தில் தொடர்ந்துவருகின்றன.
சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் சுவிட்சர்லாந்தில் கூட இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் கருத்துப்படி, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.