சூரிச்சில் வீடுகள்: உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க புதிய மக்கள் வாக்கெடுப்பு முயற்சி
சூரிச்சில் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் உள்ளூர் சுவிஸ் குடிமக்கள் மற்றும் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்கள் முதன்மை பெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது சுவிஸ் மக்கள் கட்சி (SVP).
தற்போது சூரிச்சில் வீடுகளுக்கான தேவை அதிகரித்து, வாடகை வீடுகள் குறைவாக உள்ளதால், புதியதாக குடிபெயர்ந்த வெளிநாட்டவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது குறித்து பலரிடமும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால், வீடுகள் வழங்கப்படும் போது, முதலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் SVP இந்த மக்கள் வாக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்முயற்சியை மாநில அளவிலான வாக்கெடுப்புக்கு கொண்டு செல்ல, ஆறு மாத காலக்கெடுவில் 6,000 கையொப்பங்கள் சேகரிக்கப்பட வேண்டும். தேவையான கையொப்பங்கள் கிடைத்தால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சூரிச்சில் வீடுகள் ஒதுக்கீட்டுக்கான புதிய சட்டம் இயற்றப்படும் வாய்ப்பு உள்ளது.
👉 இந்த நடவடிக்கை, வீட்டு வாடகை உயர்வு மற்றும் வெளிநாட்டவர்களின் வருகையால் ஏற்பட்டுள்ள உள்ளூர் மக்களின் சிரமங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.