சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் திடீர் தடையால் நகச்சலூன்கள் நஷ்டம்:
ஸ்விட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள நக அலங்கார நிலைய உரிமையாளர்கள் திடீரென சிக்கலில் சிக்கியுள்ளனர். காரணம், நீண்டகாலமாக ஜெல் மற்றும் வர்ணங்களில் பயன்படுத்தப்பட்ட TPO (Trimethylbenzoyl Diphenylphosphine Oxide) இரசாயனத்தை உடனடியாக தடை செய்யும் விதி அமல்படுத்தப்பட்டதுதான்.

இந்த புதிய விதியின் காரணமாக, கடைகளின் அலமாரிகள் காலியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான ஃப்ராங்க் மதிப்புள்ள பங்கு பொருட்கள் குப்பைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. சிறிய அளவிலான நக அலங்கார நிலையங்கள், “ஒரே இரவில் ஆயிரக்கணக்கான ஃப்ராங்க் இழப்பை சந்தித்தோம்” என்று கவலை தெரிவிக்கின்றன.
ஏன் TPO தடை செய்யப்பட்டது?
TPO, UV விளக்கின் கீழ் நக வர்ணத்தை கடினப்படுத்தும் திறனுக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் இதனை “பெருக்கத்திற்குப் பாதகமான நச்சு” (toxic for reproduction) என்று வகைப்படுத்தி, தாமதமின்றி தடை விதித்துள்ளது.
யார் அதிக ஆபத்தில்?
நிபுணர்களின் கூற்றுப்படி, மிகுந்த ஆபத்து தினசரி திரவப் பொருட்களை கையாளும் தொழில்முறை நிபுணர்களுக்கே உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாகவும் விளக்கப்படுகிறது. ஆனால், இந்த திடீர் தடை, நக அலங்காரத் துறைக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. “மாற்றத்துக்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை. திடீர் தடை எங்கள் தொழிலை பாதித்துள்ளது” என்று தொழில் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
© WRS