ருப்பர்ஸ்விலில் மாலை நேரத்தில் திருட்டு முயற்சி: உடனடி துரத்தலில் சந்தேகநபர் கைது
ஆர்காவ் கன்டோனின் ருப்பர்ஸ்வில் பகுதியில் புதன்கிழமை மாலை ஒரு தனி வீட்டில் திருட்டு முயற்சி இடம்பெற்றது. அதிரடி துரத்தலின் பின்னர், கன்டோனல் போலீஸ் குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரை கைது செய்தனர்.
சம்பவம் 10 டிசம்பர் 2025 புதன்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு டன்னன்வேக் பகுதியில் நடந்தது. அப்போது ஒரு அயல்வாசி கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதால் வெளியே பார்த்தார். கையில் டார்ச் லைட்டுடன் ஓடிச் செல்லும் ஒருவரை கண்டு, அவர் இருளில் மறைந்ததை கவனித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். பின்னர் ஆர்காவ் கன்டோனல் போலீஸ் மற்றும் பல பிராந்திய போலீஸ் ரோந்து குழுக்கள் விரைவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.
அப்போது ருப்பர்ஸ்விலில் தனிப்பட்ட பயிற்சியில் இருந்த கன்டோனல் போலீசின் நாய்ப்பிரிவு அதிகாரிகளும் தேடுதலில் இணைக்கப்பட்டனர். அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி குடியிருப்பு பகுதியின் விளிம்பில் பிரெஞ்சு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளை கவனித்தார். அங்கிருந்து சற்றே அப்பால் மறைந்து இருந்த ஒரு நபர் ஓட முயன்றார். அதிகாரி விரைவாக அவரைப் பிடித்து, எதிர்ப்பை மீறியும் கட்டுப்படுத்தி கைது செய்தார்.

“கைது செய்யப்பட்டவர் 42 வயதான அல்பேனிய நாட்டு நபர்; அவர் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவராகப் பதிவு செய்யப்பட்டவர்.”. அவரிடம் இருந்த பையில் திருட்டு கருவிகளும் திருடப்பட்ட பொருட்களும் இருந்தன. அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
திருட்டு நடந்த வீட்டில் ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ருப்பர்ஸ்விலிலேயே உள்ள மற்றொரு தனி வீட்டு வாசிகள் வீட்டுக்குத் திரும்பியபோது, அவர்களும் திருட்டு நடந்ததை கண்டறிந்தனர்.
அதேபோல் டின்டிகோனிலும் ஒரு தனி வீடு, திருடர்களின் இலக்காகியுள்ளது. இந்தச் சம்பவங்களுக்கிடையேயான தொடர்பை ஆர்காவ் கன்டோனல் போலீஸ் தற்போது விசாரித்து வருகிறது.
குளிர்கால மாலை நேரத்தில் அதிகரிக்கும் திருடர்கள்” செயல்பாடு இந்த வாரங்களிலும் தொடர்வதால், பண்டிகைக் காலம் வரை திருட்டு அபாயம் அதிகம் இருக்கும் என போலீசார் எச்சரித்து, பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
© Kapo AG