Migros ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ஊதியத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி, பணவீக்கத்தை ஈடுகட்ட உதவுவதற்காக ஒட்டுமொத்த சம்பள வரவுசெலவுத் திட்டத்தை 1.0 முதல் 1.3 சதவீதம் வரை அதிகரிப்பதாக சில்லறை விற்பனை நிறுவனம் செவ்வாயன்று அறிவித்தது.
முழுநேர ஊழியர்களுக்கு, உயர்வு பொதுவாக மாதத்திற்கு குறைந்தது 50 பிராங்குகள் அதிகமாக இருக்கும். தேசிய கூட்டுத் தொழிலாளர் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரியும் Migros ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தேசிய ஆணையம் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் சங்கம் உட்பட அதன் சமூகப் பங்காளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் Migros இந்த முடிவை எட்டியது. சுவிட்சர்லாந்தின் வர்த்தக சங்கமும் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டது.
சுவிஸ் அரசாங்கம் இந்த வருடத்திற்கான பணவீக்க விகிதத்தை 1.2 சதவிகிதமாக கணித்துள்ளது, எனவே Migros இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உயரும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.