கிரௌவுண்டன் கன்டோனில் N28 சாலையில் தொடர் விபத்து – 4 பேர் லேசாக காயம்
சுவிட்சர்லாந்தின் கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் உள்ள Seewis im Prättigau பகுதியில் தேசிய நெடுஞ்சாலை N28 இல் சனிக்கிழமை காலை (04.04.2026) ஏற்பட்ட தொடர் வாகன விபத்தில் நான்கு பேர் லேசாக காயமடைந்துள்ளனர்.
Kantonspolizei Graubünden தெரிவித்ததாவது, காலை 10:30 மணிக்குப் பின்னர் Landquart இலிருந்து Grüsch நோக்கி சென்ற 34 வயதுடைய ஓட்டுநரின் வாகனம் Chlustunnelக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் எதிர் பாதையில் சென்றுள்ளது. இதனால் எதிரே வந்த 28 வயதுடைய ஓட்டுநர் மற்றும் அவரது 2 வயது மகன் இருந்த வாகனத்துடன் மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதே வாகனம் மேலும் எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியது. பின்னர் மேலும் ஒரு வாகனத்துடன் தொடர்ச்சியான மோதல் ஏற்பட்டதால், மொத்தம் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தாக இது மாறியது.
default
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கிய நிலையில், பின்னர் Chur மற்றும் Schiers பகுதிகளிலிருந்து வந்த அவசர மருத்துவ குழுக்கள் நான்கு பேரையும் Schiers மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து இழுவை வாகனங்களின் மூலம் அகற்றப்பட்டன.
இந்த விபத்தினால் N28 தேசிய சாலை இரு திசைகளிலும் சுமார் 4½ மணிநேரம் மூடப்பட்டது. போக்குவரத்து மாற்று வழியாக Gandastrasse வழியாக திருப்பி விடப்பட்டது. சாலையை சுத்தம் செய்ய கிரௌவுண்டன் பொது பணித்துறை குழுவினரும் ஈடுபட்டனர்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து Kantonspolizei Graubünden மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறது.