பாடன் மாவட்டத்தில் மருத்துவ ஆபத்துகள்: விதிமீறல்களால் அழகுக்கூடம் உடனடியாக மூடப்பட்டது
ஆர்காவ் கன்டோனின் சுகாதாரம் மற்றும் சமூகத் துறை (DGS) 2025 நவம்பர் 14 அன்று பாடன் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகுக்கூடத்தை அவசர உத்தரவில் (superprovisorisch) மூடியது. இந்த நடவடிக்கையில் ஆர்காவ் ன்டோன் போலீஸும் இணைந்து செயல்பட்டது.
கடைசி இரண்டு ஆண்டுகளில் இந்த அழகுக்கூடம் பல முறை சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருந்தது. ஒவ்வொரு முறையும் பல்வேறு சட்ட மீறல்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, தகுதியற்ற நபர்கள் மருத்துவத் தன்மை கொண்ட அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதுடன், அவசியமான போது மருத்துவர் இருக்க வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படவில்லை. மேலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில அழகு தயாரிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறான மீறல்கள் மற்றும் பல வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த புகார்கள் காரணமாக, 2024 கோடைக்காலத்தில் அந்த நிறுவனத்தின் மேலாளருக்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
2025 நவம்பர் 14 அன்று கடுமையான மருத்துவ சிக்கலுடன் தொடர்புடைய இன்னொரு புகார் வந்ததைத் தொடர்ந்து, முன்னர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் போதுமானதாக இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், உடனடியாக அந்த அழகுக்கூடத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இந்த முடிவின் மூலம், சுகாதாரத்திற்கு ஆபத்தானதாக இருக்கக்கூடிய அனைத்து சிகிச்சைகளும் உடனடியாகத் தடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
© Departement Gesundheit und Soziales Aargau