ஜெனீவாவுக்கு நிலத்தடி ரயில் திட்டம் வருமா? அமைச்சர் நம்பிக்கையுடன்
ஜெனீவாவுக்கு தனிப்பட்ட நிலத்தடி ரயில் (Metro) அமைப்பை உருவாக்கும் யோசனை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. ஜெனீவா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் போக்குவரத்து அமைச்சர் பியர் மோடேட், இந்த திட்டம் நனவாகும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
புதிய விரிவான வடிவமைப்பு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் ஜெனீவா மாநில நாடாளுமன்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் பிரான்சின் Pays de Gex பகுதி முதல் ஜெனீவா நகரை கடந்து, ஏரிக்குக் கீழ் சென்று St-Julien-en-Genevois வரை செல்லும் ரயில் வழித்தடங்களை முன்மொழிகிறது. ரயில்கள் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் ஒருமுறை இயக்கப்படலாம் என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த செலவு சுமார் 5 பில்லியன் ஸ்விஸ் பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய பணியுதவி தேவையுள்ள திட்டத்திற்கான நிதியை கூட்டாட்சியும் (Swiss Confederation) பகிர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மற்றும் எல்லைப் பகுதிகளில் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலத்தடி ரயில் திட்டம் நகரின் எதிர்கால போக்குவரத்து அமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என நிபுணர்கள் கருதுகின்றனர். பயண நேரத்தை குறைக்கும், நகர மையத்தில் போக்குவரத்து அழுத்தத்தை தணிக்கும், பிரான்ஸ் – சுவிஸ் எல்லைப் பயணிகளைச் சுலபப்படுத்தும் வகையில் இது நீண்டநாள் தீர்வாக பார்க்கப்படுகிறது.
திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், ஜெனீவா சுவிட்சர்லாந்தின் முதல் சர்வதேச இணைப்புகளுடன் கூடிய முழுமையான நிலத்தடி ரயில் அமைப்பை பெறும் நகரமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
© WRS