சூரிச் மாநிலம், விண்டர்தூர் – கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு
2025 ஆகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை இரவு, விண்டர்தூரின் பியூன்டெனரியல் (Püntenareal) டோஸ் வைடன் (Töss Wyden) பகுதியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் உயிரிழப்பில் முடிந்தது. 51 வயதான ஜெர்மன் நாட்டு நபர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தார்.
சூரிச் மாநில காவல்துறை தகவலின்படி, சம்பவம் இரவு சுமார் 10.30 மணியளவில் நடந்தது. இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது. 37 வயதான பிரேசில் நாட்டு நபர், குற்றம் புரிந்தவுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.

சூரிச் மாநில காவல்துறை மற்றும் விண்டர்தூர் நகர காவல்துறை இணைந்து, பரவலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. பல மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு, சந்தேக நபர் கைதாகினார்.
விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை இணைந்து, இந்தக் கொலைக்குக் காரணமான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்த பணியாற்றி வருகின்றனர். காவல்துறை ஆரம்பக் கேள்வி பதில்களை முடித்துள்ளது. அதேசமயம், சூரிச் நுண்ணறிவு ஆய்வக நிபுணர்கள் சம்பவ இடத்தில் சான்றுகள் மற்றும் தடயங்களை சேகரித்துள்ளனர்.
@Kapo ZH