2026ல் சுவிஸ் நிதி சமநிலைத்திட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக ஜெனீவா
சுவிட்சர்லாந்தில் செல்வம் அதிகம் உள்ள கன்டோன்கள், பொருளாதார ரீதியாக பலவீனமான பகுதிகளுக்கு நிதியுதவி வழங்கும் ‘நிதி சமநிலைத்திட்டம்’ எனப்படும் அமைப்பில், 2026 ஆம் ஆண்டில் Geneva முதன்முறையாக மிகப்பெரிய பங்களிப்பாளராக மாறவுள்ளது. இதன் கீழ், ஜெனீவா கன்டோன் மட்டும் 543 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை செலுத்த வேண்டியிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை அதிகளவு பங்களிப்பு வழங்கி வந்த Zurich மற்றும் Zug ஆகிய கன்டோன்களை ஜெனீவா பின்னுக்குத் தள்ளியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் மற்ற அனைத்து கன்டோன்களையும் விட ஜெனீவா அதிக வரி வருவாயை வசூலித்ததே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகும்.
அரசுக் காசோலைகளில் இவ்வளவு பெரிய வருமானம் சேர காரணமாக இருந்தது சர்வதேச சரக்குச் சந்தை வர்த்தகமே என கூறப்படுகிறது. எண்ணெய், உலோகம், விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளின் வர்த்தக மையமாக ஜெனீவா விளங்குவதால், அந்தத் துறையிலிருந்து கிடைத்த வருவாய் மாநில நிதியை பெரிதும் உயர்த்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அமைப்பில், கன்டோன்களுக்கிடையே சமநிலையை உறுதிப்படுத்தும் இந்த நிதி சமநிலைத்திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜெனீவாவின் அதிகரித்த பங்களிப்பு, நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் அதன் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.
® KeystoneSDA