ஒருமுறை பயன்படுத்தும் மின்னணு சிகரெட்டுகளின் விற்பனைக்கு ஜெனீவாவில் தடை
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே வேகமாக பிரபலமடைந்துள்ள “ஒருமுறை பயன்படுத்தப்படும்” மின்சிகரெட்டுகள் (Disposable E-Cigarettes), ‘“puff bars”’ அல்லது ‘“vape”’ மீது நாடு முழுவதும் தடை விதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
🗣️ அரசியல்வாதிகளின் கடும் கண்டனம்
“இளைஞர்களை கவர்ந்து சிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்பொருட்கள் ஒரு அவமானம்,” என்று உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் கான்டி கடுமையாக விமர்சித்தார். மாநில நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள், பஃப் பார் போன்ற மின்சிகரெட்டுகள் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்துகின்றன என்று கண்டித்தனர்.

📉 ஐந்து ஆண்டுகளில் பெரும் பரவல்
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் விற்பனைக்கு வந்துள்ள பஃப் பார்கள், குறிப்பாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. சில கன்டோன்கள் — வாலே, பேர்ன், ஜூரா — ஏற்கனவே தடை சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அதோடு, பாசல்-ஸ்டாட், டிசினோ, சொலுத்தூர்ன், சாஃப்ப்ஹவுசன் மற்றும் வோட் மாநிலங்களிலும் இதேபோன்ற தடை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
⚖️ நாடு முழுவதும் தடை விரைவில்
2024 ஜூன் மாதத்தில், தேசிய சபையில் பசுமை கட்சி (Green Party) உறுப்பினர் கிறிஸ்டோஃப் கிளிவாஸ் கொண்டு வந்த தடைத் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஒரு வருடத்திற்கு பின்னர், சபை (சேனட்) அதனை ஆதரித்தது.
இப்போது, சுவிஸ் கூட்டாட்சி அரசு புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, பஃப் பார் விற்பனைக்கு முழுமையான தடையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய மின்சிகரெட்டுகள் (Rechargeable E-Cigarettes) இந்தத் தடைச் சட்டத்திலிருந்து விலக்கப்பட உள்ளன.
©Keystone-SDA