சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் நடுஇரவில் தவறான அலாரம் –
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் திடீரென ஒலித்து, பொதுமக்களை பயத்தில் விழிக்க வைத்தன. லாகன் நகரத்தில் இருந்த ஒருவர் கூறும்போது, “இது போர் நேரமா என்று உணர்வு வந்தது. சுமார் 3:15 மணிக்கு தூக்கத்தில் இருந்து அலாரம் சத்தத்தால் எழுந்தேன். ஆனால் சைரன் சில விநாடிகளுக்குப் பிறகு மாறியது,” எனத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் ஷ்விட்ஸ் மாநில காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாவது, ஞாயிறு அதிகாலை ஓபரார்ட், மோர்ஷாக், டுகன் மற்றும் வுட்டிகோன் போன்ற நகரங்களில் சுமார் 5 விநாடிகள் வரையிலான தவறான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகும்.

இதுபோலவே ஆர்காவ் மாநிலத்தின் ஃபிஸ்லிஸ்பாக், ப்ருக் மற்றும் பெரிகோன் நகரங்களிலும் இதேபோல் சைரன் ஒலித்ததைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்த தவறான அலாரங்களுக்கான காரணம் தற்போதைக்கு தெரியவில்லை. இது பற்றி சிவில் பாதுகாப்பு மற்றும் இராணுவ அலுவலகம் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஆர்காவ் காவல்துறை தெரிவித்துள்ளது.
@blick