F-35 போர் விமான ஒப்பந்தத்தில் சிக்கல் – செலவு உயரும் நிலையில் மக்களிடையே அதிருப்தி
அமெரிக்காவின் F-35 மறைவு போர் விமான ஒப்பந்தம் தற்போது சுவிட்சர்லாந்து அரசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், பெடரல் கவுன்சில் (Federal Council) இந்த ஒப்பந்தத்தில் பின்வாங்கத் தயாராக இல்லை என தெரிவித்துள்ளது..
திட்டத்தின் செலவு ஏற்கனவே 1.3 பில்லியன் ஃப்ராங்க் வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்ட்டின் ப்ஃபிஸ்டர் “சுவிஸ் வான்படைக்கு ஏற்ற ஒரே தேர்வு F-35 தான்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் விமர்சகர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வான்படைத் தளபதி பீட்டர் மெர்ஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள F/A-18 போர் விமானங்கள் குறைந்த செலவில் 2035 வரை பறக்கக் கூடியவை என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது சுவிட்சர்லாந்துக்கு ஐரோப்பிய மாற்று விமானங்களை ஆராய போதுமான நேரத்தை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அரசு எந்த புதிய சலுகைகளையும் (new offers) தேடத் தயங்குகிறது; அமெரிக்கா விநியோகத்தை தாமதப்படுத்தினாலும், F-35 ஒப்பந்தத்தை தொடர்ந்தே நிறைவேற்றும் நிலைப்பாட்டில் உள்ளது.
இந்த நிலைமை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. Blick செய்தித்தாள் நடத்திய கருத்துக்கணிப்பில், 70% வாசகர்கள் மீண்டும் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு கொள்கை, செலவுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்த பெரிய அரசியல் விவாதமாக மாறி வருகிறது.
@WRS