வின்டர்தூரில் ஹோட்டல் அறையிலிருந்து தப்ப முயன்ற இரு பேரை சூரிக் காவல்துறை கைதுசெய்தது
சூரிக் கான்டோன் காவல்துறை, வியாழக்கிழமை காலை வின்டர்தூரில் நடத்திய சோதனையில், திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்களை கைது செய்துள்ளது. ஹோட்டல் அறை ஒன்றில் சோதனை நடத்த வந்த காவல்துறையை கண்டதும், அந்த இரண்டு பேர் ஜன்னல் வழியாக தப்ப முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
33 மற்றும் 35 வயதுடைய இந்த இருவரும் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஓட முயன்றபோதிலும், காவல்துறையினரால் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஹோட்டல் அறை, இவர்களின் உடமைகள் மற்றும் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பரிசோதித்த போது, பணம், நகைகள் மற்றும் திருட்டுகளில் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

காவல்துறை தெரிவித்ததாவது, இந்த இருவரும் முன்னதாகவே சுவிட்சர்லாந்தில் நடந்த பல்வேறு குடியிருப்பு திருட்டு வழக்குகளுடன் தொடர்புடையவர்கள். இவர்களில் 33 வயதுடைய ஒருவருக்கு ஏற்கனவே நாட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவு இருந்தபோதும், சட்டத்தை மீறி மீண்டும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 வயதுடைய மற்றொருவர் முன்பு இடம்பெற்ற திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.
சுவிட்சர்லாந்தில் சமீபகாலமாக குடியிருப்பு திருட்டுகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் பொதுமக்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகமான எந்த நடவடிக்கையையும் உடனடியாக 117 என்ற அவசர எண்னை அழைத்து தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறார்கள்.
© Kapo ZH