Dietikon மாவட்டத்தில் கிளப்புகளில் அதிரடி சோதனை சூரிச் கன்டோனல் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு டிட்டிகான் மாவட்டத்தில் இருந்த இரண்டு கிளப்புகள் மற்றும் அங்கிருந்த விருந்தினர்களை சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதான கொசோவா நாட்டு பெண் எனவும் அவர் நுழைவுத் தடையை மீறி சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு, லிம்மாட்டல் ஆல்பிஸில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் ஃபெடரல் கேசினோ கமிஷன் சார்பாக மற்றொரு கிளப் ஆய்வு செய்யப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் சென்றபோது அங்கு சட்டவிரோதமான சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டன.