சுவிட்சர்லாந்தின் செல்வந்தர்களே மிகப்பெரிய மாசுபடுத்திகள் : ஆய்வில் வெளியான தகவல்
உலகின் பெரும் செல்வம் திரட்டப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து, அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலும் முன்னிலையில் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் கூட்டணியான ஆக்ஸ்ஃபாம் (Oxfam) வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த நாட்டின் செழிப்பு அதன் அதிக கார்பன் உமிழ்வுடன் (carbon footprint) நேரடியாக தொடர்புடையது என கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள்தொகையின் மிகப்பெரிய அளவில் பணம், சொத்து, முதலீடு போன்றவற்றை வைத்திருக்கும் செல்வந்தர்களில் 1 சதவீதம் மக்கள், ஒரு நாளில் சராசரியாக 673 கிலோகிராம் அளவிற்கு கார்பன் டைஆக்சைடு (CO₂) உமிழ்கிறார். இது அந்த நாட்டின் ஏழை மக்களின் பாதியைச் சேர்ந்த ஒருவரின் உமிழ்வை விட சுமார் 26 மடங்கு அதிகம் என ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னேற்ற நாடாகப் புகழ் பெற்றிருந்தாலும், இவ்வாய்வு அதன் உள்நாட்டு பொருளாதார சமநிலையின்மை மற்றும் வாழ்க்கைமுறை வேறுபாடுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படையாக காட்டுகிறது.
ஆக்ஸ்ஃபாம் கூறியதாவது, பெரும் செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கை, தனியார் விமானப் பயணங்கள், பெரிய வீடுகள், அதிக எரிசக்தி பயன்பாடு போன்ற காரணங்களால் அதிகளவு கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றனர். இதற்கு மாறாக, பொதுமக்கள் தங்களின் தினசரி வாழ்க்கையில் குறைந்த அளவிலான எரிசக்தி பயன்பாட்டிலேயே வாழ்கிறார்கள்.
இந்த அறிக்கை, உலகளாவிய அளவில் செல்வச் சமநிலையின்மை மற்றும் காலநிலை மாற்றம் (climate change) ஆகிய இரண்டிற்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் அரசுகள் அல்லது நிறுவனங்கள் மட்டுமின்றி, செல்வந்த நபர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை என்பதை இது நினைவூட்டுகிறது.
© KeystoneSDA