கிரான்ஸ்-மொண்டானா தீவிபத்து விசாரணை விரிவு; மேலும் 4 அதிகாரிகள் குற்றச்சாட்டில்
சுவிட்சர்லாந்தின் Crans-Montana பகுதியில் 41 பேர் உயிரிழந்து 115 பேர் காயமடைந்த பேரழிவு தீவிபத்து தொடர்பான விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது மேலும் நான்கு தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
Valais கன்டோனின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, புதிய நான்கு நபர்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் குற்றச்சாட்டுக்குட்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணைக்குட்பட்டுள்ள புதிய நபர்களில், Crans-Montana நகராட்சியின் பாதுகாப்புப் பொறுப்பாளர், 2013 முதல் 2016 வரை அந்தப் பொறுப்பில் இருந்த முன்னாள் அதிகாரி, தற்போது பொதுப் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவர் மற்றும் அருகிலுள்ள Chermignon நகராட்சியின் 2009 முதல் 2016 வரை பதவி வகித்த மேயர் ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த நபர்களிடம் மே 11 முதல் ஜூன் 3 வரை விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த தீவிபத்து சம்பவத்தில் நிர்வாகத் தவறுகள் இருந்தனவா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதையும் மையமாகக் கொண்டு விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.