சூரிச்சில் கார் Showroom இல் சொகுசு காரை திருட முயன்ற நால்வர் கைது
சூரிச் கண்டோன் போலீசார் லாங்னௌ அம் ஆல்பிஸ் (Langnau am Albis) பகுதியில் அமைந்துள்ள ஒரு கார் விற்பனையகத்தில் நடந்த கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றி சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களின் வயது 14 முதல் 19 வயதுக்குள் உள்ளது. அவர்கள் பிரான்சில் வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு துருக்கி, பிரான்ஸ் மற்றும் செர்பியா குடியுரிமை இருப்பதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

சம்பவம் எவ்வாறு நடந்தது?
காலை 5 மணிக்கு முன், லாங்னௌ அம் ஆல்பிஸ் பகுதியில் உள்ள ஒரு கார் விற்பனை நிலையத்திலிருந்து அலாரம் போலீசாருக்கு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு கொள்ளை முயற்சி நடந்ததை உறுதிப்படுத்தினர்.
அதற்குப் பிறகு, குற்றத்தளத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் பெரிய செடித்தொட்டிகளின் பின்னால் மறைந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இதே நேரத்தில், சிஹ்ல்தால் சாலை (Sihltalstrasse) பகுதியில் பிரான்ஸ் இலக்கப் பலகையுடன் இருந்த ஒரு காரை சோதித்தபோது, அதில் பயணம் செய்திருந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தற்போது நான்கு பேரும் ஒரே குழுவாக செயல்பட்டார்களா மற்றும் இதற்கு முன்னர் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்பதை விசாரித்து வருகின்றனர்.
@Kapo Zh