பாசல் -ஆம்ஸ்டர்டாம் ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஜூலை முதல், சுவிஸ் மற்றும் டச்சு நகரங்களுக்கு இடையேயான நேரடி தினசரி இணைப்பு இனி இயங்காது.
எதிர்காலத்தில் இந்த இரண்டு இடங்களுக்கும் பயணிக்க விரும்பும் பயணிகள் ஜெர்மனியின் மன்ஹெய்மில் தங்கள் ரயில்களை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Deutsche Bahn இன் தூண்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது நேரடி பாசல் – ஆம்ஸ்டர்டாம் ரயிலுக்கு பதிலாக முனிச் மற்றும் ஆம்ஸ்டர்டாம் இடையே இயக்கப்படும் ரயிலை மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில்வே நிறுவனமான எஸ் வே வே பாசலில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு பகல்நேர ரயில் இனி இயக்கப்படாது என்பதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
‘இருப்பினும், பயணிகள் ஆம்ஸ்டர்டாமிற்கான பல இணைப்புகளிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.