சுவிட்சர்லாந்தின் பேர்ன் கன்டோனிலுள்ள “ஆரே” ஆற்றில் நீந்துவதற்கு தடை
சுவிட்சர்லாந்தின் பேர்ன் கன்டோனில் அமைந்துள்ள ஆரே ஆற்றில் செப்டம்பர் மாதத்திலிருந்து படகு ஓட்டுதல் மற்றும் நீச்சல் தற்காலிகமாக தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்ன் நகரமும் கன்டோனும் ஆரி ஆற்றில் புயல் பாதுகாப்பை உறுதி செய்யவும் மார்சிலி வெளிப்புற குளத்தை புதுப்பிக்கவும் நீண்டகால கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளன.
பாதுகாப்பு காரணங்களால், ஆரே ஆற்றில் நீந்துவதற்கும் படகு ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் மற்றும் படகு ஓட்டுதல் செப்டம்பர் 22 முதல் 2026 ஆண்டு வரை தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையின் போது ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கோடை காலம் முழுவதிலும் நீந்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் குளிர்காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கான்டன் மற்றும் நகர நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.
@KeystoneSDA