போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அவசர பாதையைப் பயன்படுத்திய ஓட்டுநருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் பெர்ன் அருகே A1 நெடுஞ்சாலையில் மார்ச் 2025 இறுதியில், ஒரு வாகனம் தீப்பிடித்ததால், தீ அணைக்கும் பணிகளுக்காக முக்கிய பாதை தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் நெடுஞ்சாலையில் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நேரத்தில், ஒரு மீட்பு வாகனம் போலீஸ் கார் வழிகாட்டுதலுடன் ‘ரெட்டுங்காஸ்ஸே’ எனப்படும் அவசரப் பாதை வழியாக விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல முயன்றது. அதே சமயம், 37 வயது ஓட்டுநர் ஒருவர், கார் வரிசையில் காத்திருக்க இயலாது என்று எண்ணி, சட்டவிரோதமாக அவசர பாதையைப் பயன்படுத்தி இந்த இரண்டு மீட்பு வாகனங்களையும் பின்தொடர்ந்தார். அவர் பல கிலோமீட்டர்கள் இந்த வழியாக பயணம் செய்துள்ளார்.

பின்னர் போலீசாரால் அடையாளம் காணப்பட்ட இவர் மீது, சாலை போக்குவரத்து சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் அனுமதியின்றி நிறைந்த வாகனங்களை முந்திச் சென்றதோடு, மீண்டும் பாதைக்கு திரும்பும் போது பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். இது திட்டமிட்ட முறையில், நேரத்தைச் சேமிக்கவும் விரைவில் இலக்கை அடையவும் செய்த காரியம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக, அவருக்கு CHF 600 அபராதமும், மேலாக CHF 300 வரை வழக்குச் செலவையும் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் அபராதத்தை செலுத்த மறுத்தால், அவருக்கு ஆறு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@KeystoneSDA