சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி.! Graubunden கன்டோனில் சோகம்.! சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவில் சிக்கில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Graubunden கன்டோனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பனிப்பாறை சரிவின் போது உயிரிழந்த இருவருடன் சென்ற மற்றுமொரு நபர் உயிர் ஆபத்து எதுவுமின்றி தப்பியுள்ளார். 56 வயதான பெண் ஒருவரும், 52 வயதான ஆண் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி.!
சீரற்ற காலநிலை காரணமாக பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்பு பணியாளர்கள்எவளவு முயற்சி செய்தும் கடைசியில் பணிக்குள் புதையுண்ட இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தாத தெரிவித்தார்கள்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள். (Tamilinfo)