லௌசான் நகரில் எதிர்-ஃபாசிச பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சுவிட்சர்லாந்தின் லௌசான் நகரில் நடைபெற்ற “எதிர்-ஃபாசிச கர்னிவல்” பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போலீஸ் தகவலின்படி, சனிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 4,000 முதல் 5,000 பேர் வரை நகர மையம் வழியாக ஊர்வலமாக சென்றுள்ளனர்.
பேரணியை ஏற்பாடு செய்தவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களை மீட்டெடுப்பதும், உலகளவில் அதிகரித்து வரும் ஃபாசிச சிந்தனைகளுக்கு எதிராக ஒன்றுபடுவதுமே இந்த நிகழ்வின் நோக்கம் என தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணி வல்லோன் (Vallon) பகுதியில் தொடங்கி மொன்பெனோன் பூங்கா (Parc de Montbenon) வரை சென்றடைந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே நிர்ணயித்த பாதையை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாமல், மாற்று வழியாக நகர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரணி பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், சில இடங்களில் கட்டிடங்கள் மற்றும் வங்கிக் கிளைகள் மீது கிராஃபிட்டி எழுதி சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
WRS