சூரிச் நகரில் கனமழை பனி மற்றும் : பேருந்து சேவைகள் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் Zurich நகரில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கனமான பனிப்பொழிவு காரணமாக, நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் அனைத்து பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் உறைபனி சாலைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நகரின் பொது போக்குவரத்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Keystone-ATS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சூரிச் பொது போக்குவரத்து நிறுவனம் Verkehrsbetriebe Zürich (VBZ) வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலை காரணமாக பயணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பனி பெய்து வருவதால், இந்த சேவை இடைநிறுத்தம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து தற்போது தெளிவான தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு அதிகரித்து சாலைகளில் வழுக்கும் நிலை உருவாகியுள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சூரிச் பொது போக்குவரத்து நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அவசியம் பயணம் செய்ய வேண்டியவர்கள், ஆன்லைன் அட்டவணைகள் மற்றும் நேரடி போக்குவரத்து தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சூரிச் நகரில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு வழக்கமானதாக இருந்தாலும், இம்முறை ஏற்பட்டுள்ள கனமான பனி போக்குவரத்து அமைப்பை பெரிதும் பாதித்துள்ளது. நிலைமை சீரடைந்ததும் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 20min