சுவிஸ் இராணுவத்தினர் வீடுகளில் மீண்டும் குண்டுகளை வைத்திருக்க அனுமதி? செனட் குழுவின் பரிந்துரை
சுவிஸ் ஆயுதப்படை உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட ஆயுதங்களுக்கான குண்டுகளை மீண்டும் வீட்டிலேயே வைத்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூட்டாட்சி சபையின் பாதுகாப்புக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. வியாழக்கிழமை வெளியான நாடாளுமன்ற தகவல்களின் படி, செனட்டர் வெர்னர் சால்ஸ்மான் முன்வைத்த தீர்மானத்தை ஏற்க குழுவில் ஏழு வாக்குகள் ஆதரவாகவும், ஐந்து எதிர்ப்பாகவும் பதிவானது. இது அடுத்ததாக தேசிய சபையின் பரிசீலனைக்குச் செல்லும்.
2007ஆம் ஆண்டு அரசாங்கம், நாட்டின் பாதுகாப்பு நிலைமைக்கேற்ப மட்டுமே ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குண்டுத் தொகுப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் உக்ரைன் போரின் தொடக்கமான 2022 பிப்ரவரிக்குப் பிறகு உலக பாதுகாப்பு சூழல் பெரிதும் மாறியுள்ளதாக சால்ஸ்மான் வாதிடுகிறார். அதன் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் விரைவு பதில் நடவடிக்கைக்காக இப்படியான அனுமதி அவசியம் என அவரின் கருத்து.

இதேவேளை, 2007ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், நாடாளுமன்ற உத்தரவின் பேரில், இவ்வகை தனிப்பட்ட குண்டுகள் இராணுவத்தாலேயே பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும் என்று அரசு முடிவு செய்தது. புதிய பரிந்துரை ஏற்கப்பட்டால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த கொள்கை மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
®Keystone-SDA