ஜெனீவாவில் புதிய நிலத்தடி பொது போக்குவரத்து திட்டம்: விரிவான தகவல்கள் வெளியீடு
ஜெனீவாவின் எதிர்காலப் பொது போக்குவரத்திற்கான மிகப்பெரிய திட்டம் குறித்து அதிகாரிகள் மேலும் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் நிறைவு பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஓட்டுநர் இன்றி அதிக அதிர்வெண் சேவையுடன் இயங்கும் நிலத்தடி ரயிலாக இருக்கும்.
இந்த ரயில் CERN ஆராய்ச்சி மையம், சைமேசா தொழிற்துறை மண்டலம், மேறின், ஜெனீவா விமான நிலையம், நகர மையம், கரூஜ் மற்றும் எதிர்கால நகர்ப்புற மேம்பாட்டு பகுதிகளில் நிறுத்தம் பெறும். மேலும், Sécheron பகுதியில் எல்லை தாண்டும் Léman Express ரயில் வலையமைப்புடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். பிளாஸ் டோர்சியர் பேருந்து நிலையம் அல்லது ப்ளேன்பலே சுற்றுவட்டப் பகுதியில் கூடுதல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மக்கள் நெருக்கம் அதிகரித்து வரும் ஜெனீவா நகரத்தில், தனியார் வாகன பயன்பாட்டை குறைத்து, வேலைத்தளங்களும் குடியிருப்புப் பகுதிகளும் எளிதாகச் சேரும் நிலையான போக்குவரத்துத் தீர்வு உருவாக்குவதே திட்டத்தின் முதன்மை குறிக்கோள். திட்டம் நிறைவேறும் போது, உள்ளூர் மக்களில் 50 சதவீதமும், வேலை வாய்ப்புகளில் 70 சதவீதமும் 750 மீட்டர் தூரத்துக்குள் ஒரு நிலையத்தை அணுகக்கூடியதாக இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
© KeystoneSDA