சுவிஸில் விமானங்களில் பயணிக்கவிருப்பவர்களுக்கு மேலதிக வரி விதிப்பு.?
சுவிட்சர்லாந்தில் விமானப் போக்குவரத்து அதிகரிப்பை கட்டுப்படுத்தி, பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய மக்கள் முன்முயற்சி (Citizens’ Initiative) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முன்வைக்கத் தயாராகி வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தால் அறியப்படும் சுற்றுச்சூழல் அமைப்பு actif-trafiC இந்த முயற்சியை முன்னெடுக்கிறது.
இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம், “மாசு ஏற்படுத்துபவர் செலுத்த வேண்டும்” என்ற அடிப்படையில் விமான டிக்கெட்டுகளுக்கு ஒரு புதிய வரியை அறிமுகப்படுத்துவதாகும். அதிகம் விமானப் பயணம் செய்பவர்கள், நீண்ட தூரப் பயணிகள் மற்றும் வணிக ஜெட்கள் பயன்படுத்துவோர் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், பொதுமக்களுக்கு “மொபிலிட்டி வவுச்சர்கள்” வடிவில் வழங்கப்படுவதோடு, குறிப்பாக இரவு ரயில்கள் உள்ளிட்ட ரயில் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

முன்முயற்சியின் ஆதரவாளர்கள், இந்த முயற்சியின் நோக்கம் விமானப் பயணத்தைத் தடை செய்வது அல்ல, அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண முறைகளை மக்களுக்கு அதிகமாக ஈர்க்கும் வகையில் மேம்படுத்துவதே என வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் பலவும் விமானப் பயணத்துக்கான வரிகளை அதிகரித்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தும் அதே திசையில் நகர்வது இயல்பு வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைப்புகள், விமானப் பயணத்தால் உருவாகும் கார்பன் உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரிப்பதை கவலைக்குறியாகக் காண்கின்றன. குறிப்பாக குறுகிய தூரப் பயணங்களுக்கு விமான சேவைகளைத் தேர்வு செய்வதை விட ரயில் சேவைகளை மேம்படுத்தினால், சுவிட்சர்லாந்தின் கார்பன் காலடித்தடத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த முன்முயற்சி மக்கள் வாக்கெடுப்புக்கு வரும் நிலையில், இது சுவிஸ் போக்குவரத்து கொள்கையில் முக்கியமான மாற்றங்களுக்கான வழியைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© WRS