துர்காவ் கன்டோனில் கார்களில் திருட முயன்ற மூவர் கைது
துர்காவ் கன்டோ போலீசார் ரோமன்ஸ்ஹோர்ன் மற்றும் ஃபெல்பென்-வேல்ல்ஹவ்சன் பகுதிகளில் இரண்டு தனித்த சம்பவங்களில் மூவரை கடந்த வெள்ளி இரவும், சனி காலையிலும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முறையே மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட வழக்குகள் தற்போது மாநில வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
முதல் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ரோமன்ஸ்ஹோர்ன் துறைமுகச் சாலையில் நிகழ்ந்தது. சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமலாக்க அதிகாரிகள் ஒரு நிறுத்தப்பட்ட காருக்கு அருகே மூவரை கண்டுள்ளனர். அதிகாரிகளைப் பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அதில் ஒருவரை, 43 வயதான மொராக்கோ நபரை உடனே பிடித்து துர்காவ் கான்டன் போலீஸ் ரோந்துப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த கார்பூட்டப்படாத நிலையில் இருந்ததாகவும், அதிலிருந்த திருடப்பட்ட பொருட்கள் அந்த நபரிடம் இருந்ததாகவும் போலீஸ் கூறுகிறது. மற்ற இருவரைத் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டாவது சம்பவம் சனி காலை 6.30 மணியளவில் ஃபெல்பென்-வேல்ல்ஹவ்சனில் நடந்தது. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பவர்கள், பூட்டப்படாத கார்களைத் தேடி பார்த்த இரண்டு நபர்களைக் கண்டு தடுத்து வைத்திருந்ததாக போலீசுக்கு தெரிவித்தனர். சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடம் வந்து, 21 மற்றும் 25 வயதான இரு அல்ஜீரியர்களையும் கைது செய்தனர். அவர்களும் தற்போது காவலில் உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்படாத வாகனங்களை குறிவைத்து செய்யப்படும் இத்தகைய சிறிய ஆனால் தொடர்ச்சியான திருட்டு முயற்சிகள் குறித்து பல கன்டோன்கள் எச்சரிக்கை வழங்கி வருகின்றன. காவல்துறைகள் மீண்டும் ஒருமுறை மக்கள் தங்கள் வாகனங்களை நிச்சயமாக பூட்டியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன.
© Kapo TG