இத்தாலி எல்பா தீவில் சுவிஸ் சிறுவனுக்கு கடுமையான விபத்து
இத்தாலியின் எல்பா தீவில் விடுமுறையில் இருந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் கடுமையான விபத்தில் சிக்கி இடது கையில் உள்ள ஒரு விரலை இழந்துள்ளார். விபத்து எப்படிச் சம்பவித்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக 118 அவசர உதவி குழுவினர் விரைந்தனர். நிலைமை மிகக் கவலைக்கிடமாக இருந்ததால், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ‘பெகாசோ’ பயன்படுத்தி குழந்தை விரைவாக பிளாரன்ஸ் நகரிலுள்ள மெயர் சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் மிகவும் சிக்கலான சிகிச்சை முறையின் மூலம் விரலை மீண்டும் இணைக்க முயற்சி செய்தனர்.

இந்த எதிர்பாராத விபத்தால் சிறுவனின் குடும்பம் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், சிறுவனின் நிலைமை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© KeystoneSDA