சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவயைில் சுவிட்சர்லாந்து முன்வைத்த விமர்சனங்கள் காரணமாக இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியா சிறுபான்மையினரைக் காக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என சுவிட்சர்லாந்து விமர்சித்திருந்தது. இந்த விமர்சனம் தொடர்பில் இந்தியா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தானே இனவெறி, அமைப்புசார் பாகுபாடு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பை எதிர்கொள்ளும் நாடாக உள்ளது. இந்தியா இவற்றை சமாளிக்க உதவ தயாராக உள்ளது,” என ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி க்ஷிதிஜ் தியாகி தெரிவித்துள்ளார்.
சுவிஸ் விமர்சனத்தை அவர் “ஆச்சரியமானது, மேற்பரப்பானது மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது” எனக் குறிப்பிட்டார். மேலும், “இவை முற்றிலும் புனையப்பட்ட கதைப்போக்குகள்; மனித உரிமைப் பேரவயைின் நேரத்தை வீணாக்குகின்றன” என்றும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய, பல்வகைமை கொண்ட, உயிரோட்டமிக்க ஜனநாயகம். எங்கள் மக்கள் பல்துறை, பல மதங்களை ஏற்றுக்கொள்கின்றனர்,” என்று தியாகி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா உட்பட பல நாடுகள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை உறுதி செய்யவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்தின் பிரதிநிதி மைக்கேல் மேயர் வலியுறுத்தியிருந்தார்.
இந்திய சமூக ஊடகங்களில், தியாகியின் பதிலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் இந்த கருத்துக்கு இந்தியாவில் மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.